» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாலை விபத்தில் பலியான ஆசிரியை குடும்பத்திற்கு ரூ. 27 லட்சம் இழப்பீடு: தீர்ப்பாயம் உத்தரவு!

வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:11:16 PM (IST)

சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியை குடும்பத்திற்கு ரூ. 27 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நெல்லை மோட்டார் விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சோக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் விஜயமாலினி (45). கடந்த 20.10.2021 அன்று தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரியனேந்தல் பாலம் அருகே நடைபெற்ற கோர சாலை விபத்தில் இவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆசிரியை விஜயமாலினியின் உயிரிழப்பைத் தொடர்ந்து, அவரது கணவர் தாமோதரன், மகள் ரிஷிப்ரியா மற்றும் மகன் மோனிக் பிரசன்னா ஆகியோர் உரிய இழப்பீடு கோரி வழக்கறிஞர் செல்வராஜ் மூலமாக மோட்டார் விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இவ்வழக்கை நெல்லை மோட்டார் விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி செல்வம் தீவிரமாக விசாரித்தார். வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உயிரிழந்த ஆசிரியை விஜயமாலினியின் குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ. 27 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கிட உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory