» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மின்னாளி கபடி போட்டி: நெல்லை அணி முதலிடம்.

வியாழன் 1, பிப்ரவரி 2024 10:04:25 AM (IST)



கோமானேரியில் நடந்த மின்னொளி கபடி போட்டியில் நெல்லை கணேஷ் பிரதர் அணி வென்று முதலிடம் பெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கோமானேரியில் ஊர் பொதுமக்கள், முத்தாரம்மன் ஸ்போர்ட் கிளப் சார்பில் 5ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் நெல்லை கணேஷ்பிரதர்ஸ் அணி, விட்டிலாபுரம் வேல்மணி பிரதர்ஸ் அணி, சாத்தான்குளம், தோழப்பன்பண்ணைஅணி, கோமானேரி உள்ளிட்ட பல அணிக்ள் கலந்து கொண்டனர். 

போட்டிகளை பார்வார்டு பிளாக் கட்சி நெல்லை இளைஞரணி செயலர் குமார், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் இதில் நெல்லை கணேஷ் பிரதர் அணி முதலிடம், விட்டிலாபுரம் வேல்கனி பிரதர்ஸ் அணி 2இடமும், தோழப்பண்ணை வள்ளுவர் அணி 3இடமும், கோமானேரி எம் எப்சி அணி 4ஆம் இடமும் பிடித்த்து. போட்டியில் முதல்பரிசு பெற்ற நெல்லை அணிக்கு சாலை பாதுகாப்பு நுகர்வோர்குழு உறுப்பினர் ஹெச். போனிபாஸ் ரூ7ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கினார். 

2ஆம் பரிசு பெற்ற விட்டிலாபுரம் அணிக்கு தொழிலதிபர் சுடலைக்கண் ரூ5ஆயிரம் வழங்கினார். 3ஆம் பரிசு பெற்ற தோழப் பண்ணை அணிக்கு சண்முகசுந்தரம் ரூ3ஆயிரம் வழங்கினார். 4ஆம் பரிசு பெற்ற கோமானேரி அணிக்கு முனியாண்டி ரூ2ஆயிரம் வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அணி வீர்ர்களுக்கு பார்வார்டு பிளாக் கட்சி நெல்லை இளைஞரணி செயலர்குமார் சார்பில் பனியன் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை முத்தாரம்மன் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் சோமசுந்தரம், மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory