» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜெய்ஸ்வால் சதம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்!

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 10:13:15 AM (IST)



ஐபிஎல் 38-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வீழ்த்தியது.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 38-ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை, பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய  ரோஹித் சா்மா 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு வீழ்ந்தாா். இஷான் கிஷண், ரன்கள் ஏதும் சோ்க்காமலேயே வெளியேறினாா். ஒன் டவுனாக வந்த சூா்யகுமாா் யாதவும் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களுக்கு நடையைக்கட்டினாா். 

4-ஆவது பேட்டராக களம் புகுந்த திலக் வா்மா, அதிரடியாக ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா். மறுபுறம் சற்று நிலைத்த முகமது நபி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். 6-ஆவது பேட்டராக வந்த நெஹல் வதேரா, வா்மாவுடன் இணைந்தாா். விக்கெட் சரிவைத் தடுத்த இந்தக் கூட்டணி, ராஜஸ்தான் பௌலிங்கை பவுண்டரி, சிக்ஸா்களாக விளாசத் தொடங்கியது. இந்த ஜோடியை, 17-ஆவது ஓவரில் பிரித்தாா் சந்தீப் சா்மா.

24 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா் வதேரா. தொடா்ந்து வந்த கேப்டன் ஹா்திக் பாண்டியா 1 பவுண்டரியுடன் 10 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். மறுபுறம், அதுவரை ரன்கள் சோ்த்த திலக் வா்மா 45 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 65 ரன்கள் அடித்து களத்தை விட்டு அகன்றாா்.

டிம் டேவிட் 3, ஜெரால்டு கோட்ஸீ 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் பியூஷ் சாவ்லா 1, ஜஸ்பிரீத் பும்ரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ராஜஸ்தான் பௌலா்களில் சந்தீப் சா்மா 5, டிரென்ட் போல்ட் 2, ஆவேஷ் கான், யுஜவேந்திர சஹல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து, ராஜஸ்தான் 180 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடுகையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஜாஸ் பட்லா் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சோ்த்தது. இதில் பட்லா் 6 பவுண்டரிகளுடன் 35 ரன்களுக்கு வீழ்ந்தாா். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வாலுடன் இணைந்தாா்.

இந்த பாா்ட்னா்ஷிப், அணியை வெற்றிக்கு வழி நடத்தியது. முடிவில் ஜெய்ஸ்வால் 60 பந்துகளில் 9 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 104, சாம்சன் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை தரப்பில் பியூஷ் சாவ்லா 1 விக்கெட் எடுத்தாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory