» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சர்ச்சைக்குரிய சைகை: பாகிஸ்தான் வீரர்கள் மீது பி.சி.சி.ஐ. புகார்!
வியாழன் 25, செப்டம்பர் 2025 10:38:42 AM (IST)
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் சைகை செய்த பாகிஸ்தான் வீரர்கள் மீது பி.சி.சி.ஐ. புகார் அளித்துள்ளது.
நடப்பு ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் சர்ச்சைக்குரிய வகையில் சைகை செய்த பாகிஸ்தான் வீரர்களான சாஹிப்சாதா பர்ஹான் மற்றும் ஹாரிஸ் ரவூப் மீது நடவடிக்கை கோரி போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்டிடம் பி.சி.சி.ஐ. புகார் அளித்துள்ளது.
ஹாரிஸ் ரவூப் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது போல சைகை செய்து காட்டி இந்திய ரசிகர்களை சீண்டினார். மறுபுறம் பர்ஹான் அரைசதம் அடித்ததும் துப்பாக்கியை வைத்து சுடுவதுபோல் கொண்டாடினார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்டிடம் பி.சி.சி.ஐ. புகார் அளித்துள்ளது. அத்துடன் அவர்கள் செய்த சைகையின் வீடியோ காட்சிகளை ஆதாரமாக பி.சி.சி.ஐ. சமர்ப்பித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேட்டிங் சொதப்பல்: சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி தோல்வி!
திங்கள் 23, பிப்ரவரி 2026 10:33:50 AM (IST)

இந்தியா அரையிறுதி சுற்றுக்கு செல்லாது : முன்னாள் பாகிஸ்தான் வீரர் கணிப்பு
சனி 21, பிப்ரவரி 2026 11:16:54 AM (IST)

ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக 17 வெற்றிகள்: புதிய உலக சாதனை படைத்தது இந்தியா!
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:13:45 AM (IST)

டி20 உலகக் கோப்பை: நமீபியாவை வீழ்த்தி சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது பாகிஸ்தான்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:08:40 AM (IST)

ரஞ்சி டிராபி: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஜம்மு-காஷ்மீர் வரலாற்று சாதனை!
புதன் 18, பிப்ரவரி 2026 5:08:29 PM (IST)

டி20 உலகக் கோப்பை: லீக் சுற்றிலேயே வெளியேறிய ஆஸ்திரேலியா!
புதன் 18, பிப்ரவரி 2026 10:40:25 AM (IST)

