» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமைப்பில் மாற்றம்: ஐசிசி வருடாந்திர கூட்டத்தில் முடிவு!

வியாழன் 16, ஜூலை 2026 4:37:54 PM (IST)

ICC.jpg

50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களின் போட்டி வடிவங்களை மாற்றியமைக்க ஐசிசி முடிவு செய்துள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) வருடாந்திர கூட்டம் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை ஆகிய தொடர்களின் போட்டி வடிவங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் 14 அணிகள் பங்கேற்கும். இத்தொடர் சூப்பர் சீரிஸ், குரூப் ஸ்டேஜ், சூப்பர் 7, அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி என 4 சுற்றுகளாக நடத்தப்படும்.

சூப்பர் சீரிஸ்: 12, 13 மற்றும் 14-வது இடங்களில் உள்ள அணிகள் மோதும். இதில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும்.

குரூப் ஸ்டேஜ்: 12 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு (ஒவ்வொரு பிரிவிலும் 6 அணிகள்) ரவுண்ட் ராபின் முறையில் 30 போட்டிகள் நடைபெறும்.

சூப்பர் 7: இரு பிரிவுகளிலும் தலா 3 இடங்களைப் பிடிக்கும் அணிகளுடன், சிறந்த நிலையில் உள்ள மேலும் ஒரு அணியும் இணைந்து மொத்தம் 7 அணிகள் ரவுண்ட் ராபின் முறையில் 21 போட்டிகளில் விளையாடும். இதிலிருந்து 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

2028 டி20 உலகக் கோப்பை:

டி20 உலகக் கோப்பைத் தொடரில் 20 அணிகள் பங்கேற்று மொத்தம் 55 போட்டிகள் நடைபெறும்.

குரூப் ஸ்டேஜ்: அணிகள் 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு (பிரிவுக்கு 4 அணிகள்) ரவுண்ட் ராபின் முறையில் 30 போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் மொத்தம் 10 அணிகள் அடுத்த சுற்றுக்குச் செல்லும்.

சூப்பர் 10 மற்றும் எலிமினேட்டர்: 10 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும் (பிரிவுக்கு 5 அணிகள்). இரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதிக்குத் தகுதி பெறும்.

எஞ்சிய 2 அரை இறுதி அணிகளைத் தேர்வு செய்ய ஐபிஎல் பாணியில் எலிமினேட்டர் சுற்றுகள் நடத்தப்படும். இரு பிரிவிலும் 3-வது மற்றும் 4-வது இடங்களைப் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் ஆட்டங்களில் மோதி, வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory