» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நம்பி நாராயணன் மீது பொய் வழக்கு கேரளா உயர்நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீன் ரத்து!
சனி 3, டிசம்பர் 2022 5:01:53 PM (IST)
விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது பொய் வழக்கு போட்ட கேரளா அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்கிய கேரளா உயர்நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த நிலையில் இஸ்ரோ வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட குற்றவாளிகளான கேரள முன்னாள் டிஜிபி சிபி மேத்யூஸ், பி.எஸ்.ஜெயபிரகாஷ், தம்பி எஸ்.துர்கா தத், விஜயன் மற்றும் ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோர் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து அதனை விசாரித்த நீதிமன்றம் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக மேற்கண்ட அனைவருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து மேற்கண்ட கேரளா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிபி.ஐ தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில்,‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் சிபி.ஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கிறது. இதில் விஞ்ஞானி நம்பி நாராயண மீது பொய் புகார் இணைக்க சதி செய்த குற்றச்சாட்டில் நான்கு அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்கிய கேரள உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம்.மேலும் இந்த வழக்கை விரிவாக விசாரிக்க மீண்டும் கேரளா உயர்நீதிமன்றத்திற்கு திருப்பி வைக்கிறோம். அவர்கள் நான்கு வாரத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் பொறியாளர்கள் முக்கிய பங்கு: பிரதமர் வாழ்த்து
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:32:03 AM (IST)

மிசோரம் மாநிலத்தின் முதல் ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
சனி 13, செப்டம்பர் 2025 12:51:08 PM (IST)
