» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரியாணி தட்டில் ராமர் படம்: பொதுமக்கள் போராட்டம் - ஓட்டல் உரிமையாளர் கைது!

புதன் 24, ஏப்ரல் 2024 11:46:38 AM (IST)

டெல்லியில் ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி விற்பனை செய்த விவகாரத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். 

டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜஹாங்கிர்புரி என்ற இடத்தில் ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் ராமர் படம் கொண்ட பேப்பர் தட்டில் பிரியாணி பரிமாறப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதைக்கண்டு கோபமடைந்த மக்கள் பலர் அந்த ஓட்டல் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலி் அறிற்து சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். 

அதன்படி ஓட்டல் உரிமையாளரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு அவர் போலீசாரிடம் தட்டுகளில் ராமர் படம் இருப்பது குறித்து தனக்குத் தெரியாது என கூறினார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஒரு தொழிற்சாலையில் இருந்து 1,000 பேப்பர் தட்டுகளை வாங்கியதும், அதில் 4 தட்டுகளில் மட்டும் ராமர் படம் அச்சிடப்பட்டிருந்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளரை போலீசார் விடுவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory