» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)
மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மோடி அரசு விவசாயிகளைக் கொன்று வருகிறது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத காலத்தில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை மாநில சட்டப்பேரவையில் அரசு தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று தலையங்கம் வெளியிட்டது. இதை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "யோசித்துப் பாருங்கள்... வெறும் 3 மாதங்களில், மகாராஷ்டிராவில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இது வெறும் புள்ளிவிவரமா? நிச்சயமாக இல்லை. உண்மை என்னவென்றால், 767 குடும்பங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அந்த 767 குடும்பங்களால் இனி ஒருபோதும் மீள முடியாது. ஆனால், அரசாங்கம் அமைதியாக இருக்கிறது. அது அலட்சியமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
விவசாயிகள் ஒவ்வொரு நாளும் கடனில் மூழ்குகிறார்கள். விதைகள் விலை அதிகம், உரங்கள் விலை அதிகம், டீசல் விலை அதிகம். ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவர்கள் கடன் தள்ளுபடி கோரும்போது, அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
ஆனால் கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள்? மோடி அரசாங்கம் அவர்களின் கடன்களை எளிதில் தள்ளுபடி செய்கிறது. இன்றைய செய்திகளைப் பாருங்கள் - ‘எஸ்பிஐ வங்கியில் அனில் அம்பானி ரூ.48,000 கோடி மோசடி.’ விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று மோடி கூறியிருந்தார்.
ஆனால், நமக்கெல்லாம் உணவு அளிக்கும் விவசாயிகளின் வாழும் காலம் பாதியாகக் குறைக்கப்படும் அளவுக்கே தற்பேது நிலைமை உள்ளது. இந்த அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது - அமைதியாக, ஆனால் தொடர்ந்து. அதேநேரத்தில், பிரதமர் மோடி, தனது சொந்த மக்கள் தொடர்பு காட்சிகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)

ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலி : ரயில்ஒன் ஆப் அறிமுகம்
புதன் 2, ஜூலை 2025 11:40:00 AM (IST)

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!!
செவ்வாய் 1, ஜூலை 2025 5:36:50 PM (IST)

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)
