» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)
ஆதார் திருத்தம் தொடர்பான கட்டணங்கள் அக்.1 ஆம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது என்று UIDAI அறிவித்துள்ளது.
இந்தியர்களின் முக்கிய அடையாள அட்டையாக இருக்கும் ஆதார் கார்டு (UIDAI வழங்குவது) வங்கி, அரசு திட்டங்கள், பயணம், டிஜிட்டல் சரிபார்ப்பு என பல இடங்களில் அவசியமாகிறது. அதனால், குறிப்பாக பிறந்த தேதி (DOB) உள்ளிட்ட தகவல்கள் சரியாக இருப்பது மிக முக்கியம். தற்போது, UIDAI பிறந்த தேதியை திருத்தும் செயல்முறையை எளிமைப்படுத்தியுள்ள நிலையில், அதை ஆன்லைனில் செய்ய முடியாது. நேரடியாக சென்டரில்தான் செய்ய வேண்டும்.
இந்த நிலையில், ஆதார் திருத்தம் தொடர்பான கட்டணங்கள் அக்.1 ஆம் தேதி முதல், உயர்த்தப்படுகிறது. ஆதாரில் பயோமெட்ரிக் தகவல் புதுப்பிக்கும் கட்டணம் ரூ,100-ல் இருந்து ரூ.125 ஆக உயர்வதாக UIDAI அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு, 7 முதல் 15 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பிற புதுப்பிப்புகளுக்கான கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.75 ஆக உயரும் என்றும் myAadhaar போர்டல் வாயிலாக ஆவணங்களைப் புதுப்பிப்பது ஜூன் 14, 2026 வரை இலவசமாக தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் பொறியாளர்கள் முக்கிய பங்கு: பிரதமர் வாழ்த்து
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:32:03 AM (IST)

மிசோரம் மாநிலத்தின் முதல் ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
சனி 13, செப்டம்பர் 2025 12:51:08 PM (IST)

ஜக்கி வாசுதேவ் போன்ற போலி வீடியோ உருவாக்கி பெண்ணிடம் ரூ.3.75 கோடி நூதன மோசடி!
சனி 13, செப்டம்பர் 2025 12:30:17 PM (IST)
