» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சிவசேனா கட்சியை பிரதமர் மோடி உடைத்தார் : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
வெள்ளி 9, ஜனவரி 2026 4:59:21 PM (IST)
பிரதமர் மோடிக்கு இருமுறை உதவி செய்த போதிலும் அவர் எனது சிவசேனா கட்சியை உடைத்தார் என்று உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2022 ஜூன் மாதம் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது. தற்போது உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர் அணியும், மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியும் செயல்படுகின்றன.
இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடிக்காக நான் தீவிர பிரச்சாரம் செய்தேன். இருமுறை மோடிக்கு உதவி செய்த போதிலும் அவர் எனது கட்சியை உடைத்தார். அவர் பிரதமராக வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.
ஆனால் நான் அழிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார். மகாராஷ்டிராவில் இருந்து மும்பையை பிரிக்க வேண்டும் என்பது பாஜகவின் பழைய கனவு ஆகும். சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே கடந்த 2012-ம் ஆண்டு வரை வாழ்ந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் பாஜக வளைந்து நின்றது. தற்போது அவர் உயிரோடு இல்லாத சூழலில் காகித அளவில் சிவசேனாவை அழித்துவிட்டனர்.
ஆனால் மக்களின் மனங்களில் இருந்து சிவசேனாவை அழிக்க முடியாது. அரசியல் நாகரிகத்தை மீறி பாஜக செயல்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு நானும் ராஜ் தாக்கரேவும் ஒன்றிணைந்துள்ளோம். இனிமேல் நாங்கள் ஒரு போதும் பிரிய மாட்டோம். இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஜூன் மாதம் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது. தற்போது உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர் அணியும், மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியும் செயல்படுகின்றன.இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடிக்காக நான் தீவிர பிரச்சாரம் செய்தேன். இருமுறை மோடிக்கு உதவி செய்த போதிலும் அவர் எனது கட்சியை உடைத்தார். அவர் பிரதமராக வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.
ஆனால் நான் அழிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார். மகாராஷ்டிராவில் இருந்து மும்பையை பிரிக்க வேண்டும் என்பது பாஜகவின் பழைய கனவு ஆகும். சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே கடந்த 2012-ம் ஆண்டு வரை வாழ்ந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் பாஜக வளைந்து நின்றது. தற்போது அவர் உயிரோடு இல்லாத சூழலில் காகித அளவில் சிவசேனாவை அழித்துவிட்டனர்.
ஆனால் மக்களின் மனங்களில் இருந்து சிவசேனாவை அழிக்க முடியாது. அரசியல் நாகரிகத்தை மீறி பாஜக செயல்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு நானும் ராஜ் தாக்கரேவும் ஒன்றிணைந்துள்ளோம். இனிமேல் நாங்கள் ஒரு போதும் பிரிய மாட்டோம். இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மும்பை குறித்து சர்ச்சை பேச்சு: அண்ணாமலைக்கு உத்தவ் சிவசேனா கண்டனம்!
ஞாயிறு 11, ஜனவரி 2026 12:36:55 PM (IST)

ஜனநாயகன் பட விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு!
சனி 10, ஜனவரி 2026 4:06:56 PM (IST)

பள்ளிகளில் மலையாளம் கட்டாயம் விவகாரம்: பினராயி விஜயனுக்கு சித்தராமையா கடிதம்!
சனி 10, ஜனவரி 2026 11:47:16 AM (IST)

நாடாளுமன்றம் ஜன.28ஆம் தேதி கூடுகிறது: பிப்.1-ல் பட்ஜெட் தாக்கல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 5:26:52 PM (IST)

ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை: மம்தா பானர்ஜி கடும் கண்டனம்
வியாழன் 8, ஜனவரி 2026 4:38:10 PM (IST)

பனிச்சறுக்கு விபத்து: வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் மகன் மரணம்!
வியாழன் 8, ஜனவரி 2026 10:19:38 AM (IST)

