» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
எரிபொருள் தட்டுப்பாட்டைத் தடுக்க எஸ்மா சட்டம் அமல்: பதுக்கலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!
செவ்வாய் 10, மார்ச் 2026 12:25:37 PM (IST)
அரபு நாடுகளில் நிலவும் போர் சூழலால் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய 'அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம்' (Essential Services Maintenance Act) மற்றும் 1951-ஆம் ஆண்டின் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளன.
எரிபொருட்களைப் பதுக்குபவர்கள் மீது இந்தச் சட்டத்தின் கீழ் அபராதம் மற்றும் கைது நடவடிக்கைகள் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான எரிபொருள் போக்குவரத்தை இனி மத்திய அரசே நேரடியாகக் கண்காணிக்கும். பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், எரிபொருட்களின் அதிகபட்ச விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் இந்தச் சட்டத்தின் மூலம் அரசுக்குக் கிடைக்கிறது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் விநியோகத் தடையால் உள்நாட்டில் செயற்கையான தட்டுப்பாடு உருவாவதைத் தடுக்கவும், சாமானிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக மக்கள் ஸ்டாலினுக்கு மீண்டும் ஒருமுறை வெற்றியைப் பரிசளிப்பார்கள்: கெஜ்ரிவால் நம்பிக்கை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 11:45:23 AM (IST)

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்: இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 12.8% சரிவு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 10:55:14 AM (IST)

ஹார்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு – மத்திய அரசு கடும் கண்டனம்!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:34:00 AM (IST)

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு: அமைச்சரவை ஒப்புதல்
சனி 18, ஏப்ரல் 2026 5:27:06 PM (IST)

இண்டியா கூட்டணி எதிர்ப்பு எதிரொலி: மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதா தோல்வி
சனி 18, ஏப்ரல் 2026 10:45:21 AM (IST)

தென் மாநிலங்களை அதிகாரமற்றதாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:36:14 PM (IST)

