» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: தண்டனை நிறுத்தி வைக்க கேரளா உயர் நீதிமன்றம் மறுப்பு!

வெள்ளி 24, ஜூலை 2026 11:52:19 AM (IST)

keralahighcourt.jpg

கேரளாவில் நடிகை கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இரு குற்றவாளிகளின் 20 ஆண்டுச் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க கேரளா உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 17 அன்று திருச்சூரில் இருந்து கொச்சிக்குக் காரில் சென்ற பிரபல நடிகை, மர்மக் கும்பலால் கடத்தப்பட்டு ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இவ்வழக்கில், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 5-வது மற்றும் 6-வது குற்றவாளிகளான சலீம் மற்றும் பிரதீப் ஆகியோர் தங்களின் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும் வரை, தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி கேரளா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

மனுக்களைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்: 

இந்த மனுக்களை விசாரித்த கேரளா உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் கே. வி. ஜெயகுமார் அடங்கிய அமர்வு, மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அப்போது நீதிபதிகள் தெரிவித்ததாவது: "பொதுநலன், சமூகத்தில் இக்குற்றத்தால் ஏற்படும் தாக்கம் மற்றும் நீதித்துறையின் மீது மக்களின் நம்பிக்கையைக் காக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி, அதைத் துல்லியமாகச் செயல்படுத்தியதற்கும், அதில் சலீமும் பிரதீப்பும் ஒரே எண்ணத்தோடு உதவியதற்கும் போதுமான ஆதாரங்கள் முதற்கட்டமாக உள்ளன.

மேலும், செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்தவொரு தெளிவான தவறோ அல்லது சட்டமீறலோ இருப்பதை மனுதாரர்கள் சுட்டிக்காட்டத் தவறிவிட்டதால், தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என்று தெரிவித்தனர். 

முன்னதாக, கடந்த ஜூலை 9 அன்று இவ்வழக்கின் முதன்மை குற்றவாளியான ‘பல்சர் சுனி’ தாக்கல் செய்த தண்டனை நிறுத்த மனுவையும் உயர் நீதிமன்றம் மறுத்துத் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. இதே வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த நடிகர் திலீப் உட்பட 4 பேரைச் செஷன்ஸ் நீதிமன்றம் ஏற்கனவே விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory