» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு முருகன் படம் வழங்கி வாழ்த்து பெற்ற தமிழக ஐபிஎஸ் அதிகாரி!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:19:20 PM (IST)

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்த தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சு.ராஜேஷ், அவருக்குக் கடவுள் முருகனின் படத்தை நினைவுப் பரிசாக வழங்கி வாழ்த்துப் பெற்றார். இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சு.ராஜேஷ். 2011-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், உத்தரப் பிரதேச கேடரில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு டிஐஜியாக (DIG) பதவி உயர்வு பெற்ற இவர், தற்போது பாந்தா சரகத்தில் பணியாற்றி வருகிறார்.
தனது டிஐஜி பணியில் ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்ததைக் குறித்து, முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேற்று சந்தித்து அவர் வாழ்த்துப் பெற்றார். அப்போது, தமிழ்க் கடவுளான பழனி முருகன் திருவுருவப் படத்தை முதல்வருக்குப் பரிசாக வழங்கினார்.
முருகன் படத்தைப் பெற்றுக்கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் மிகுந்த மகிழ்ச்சியுடன், "சிவன் மற்றும் பார்வதியின் மூத்த மகனாகவும், செல்ல மகனாகவும் இருப்பவர் முருகன்" எனக் குறிப்பிட்டுப் பாராட்டினார். ஒரு துறவியான முதல்வருக்கு இதுவரை யாரும் முருகன் படத்தைப் பரிசாக வழங்கியதில்லை என்பதால், இந்த நிகழ்வு உ.பி. மாநில மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உத்தரப் பிரதேச காவல்துறையில் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த டி.பிரகாஷ் மற்றும் ஆண்டனி தேவ் குமார் ஆகிய இரு தமிழக அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கி கணக்கு எண்ணை மாற்றாமல் வங்கி மாறும் வசதி : ரிசர்வ் வங்கி பரிசீலனை!
புதன் 1, ஏப்ரல் 2026 12:53:12 PM (IST)

சர்வதேசப் போர் பதற்றம்: பிரீமியம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
புதன் 1, ஏப்ரல் 2026 12:23:41 PM (IST)

அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத் தேசிய மாநாடு : தேசிய செயலாளராக டி.எஸ்.ஆர். சுபாஷ் தேர்வு!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:43:23 PM (IST)

பீகார் கோவில் திருவிழாவில் பெரும் சோகம்: கூட்ட நெரிசலில் 8 பெண்கள் உயிரிழப்பு!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:24:20 PM (IST)

ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலியைக் கொன்று பிரிட்ஜில் வைத்த கடற்படை ஊழியர்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:25:07 PM (IST)

கேரளாவில் பா.ஜனதா ஆட்சியின் நுழைவுவாயில் பாலக்காடு - பிரதமர் மோடி பிரசாரம்!
திங்கள் 30, மார்ச் 2026 9:34:25 AM (IST)

