» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆந்திராவில் ஒரே குடும்பத்தில் 5 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:09:32 PM (IST)
ஆந்திர மாநிலம் நகரி அருகே குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவி மற்றும் தாயைக் கொலை செய்த சிமெண்ட் வியாபாரி, பின்னர் இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், நாராயணவனம் மண்டலம் வெங்கடகிருஷ்ணா பாளையத்தைச் சேர்ந்தவர் மோகன் (45). இவர் சிமெண்ட் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ஹரிதா (33) அழகு நிலையம் நடத்தி வந்தார். இவர்களுக்குக் கௌசிக் (14) என்ற மகனும், ஹரிணி (12) என்ற மகளும் இருந்தனர். மோகன் தனது தாய் சந்திரகலாவுடன் (65) ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் மோகனின் மைத்துனர் பாலகிருஷ்ணா வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அக்காள் ஹரிதாவும், தாய் சந்திரகலாவும் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மோகனின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், மாயமான மோகன் மற்றும் அவரது இரு குழந்தைகள் அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர். மோகன் தனது தாய் மற்றும் மனைவியைக் கொன்றுவிட்டு, குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது. தொழில் நஷ்டம் காரணமா அல்லது குடும்பத் தகராறா? இந்த விபரீத முடிவுக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சபரிமலை சன்னிதானம் மீது தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர்: கடலோர காவல் படை விளக்கம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:49:17 PM (IST)

ஆம் ஆத்மியில் பெரும் பிளவு: ராகவ் சத்தா, சந்தீப் பதக் உள்ளிட்ட 7 எம்பிக்கள் பாஜகவில் ஐக்கியம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:28:08 PM (IST)

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் திட்டம் ஏதும் தற்போது இல்லை: மத்திய அரசு அறிவிப்பு
வெள்ளி 24, ஏப்ரல் 2026 11:13:14 AM (IST)

மேற்கு வங்கத்தில் விறுவிறுப்பான முதல்கட்டத் தேர்தல் : மதியம் 3 மணிக்கே 78% வாக்குப்பதிவு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:16:59 PM (IST)

புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தலையீடு : மம்தா பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:50:06 PM (IST)

ஆட்டோ டெபிட் வரம்பு ரூ.15 ஆயிரமாக உயர்வு : இனி ஓடிபி தேவையில்லை - ஆர்பிஐ அறிவிப்பு!
புதன் 22, ஏப்ரல் 2026 5:51:36 PM (IST)

