» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வயநாடு பகுதியில் பெரும் நிலச்சரிவு: 2 பேர் உயிரிழப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!
செவ்வாய் 7, ஜூலை 2026 4:17:39 PM (IST)

கேரள மாநிலம் வயநாட்டில் சுரங்கப்பாதை சாலை கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர்; காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோழிக்கோடு மற்றும் வயநாட்டை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் வயநாடு சுரங்கப்பாதை சாலை திட்டத்தின் (அனக்கம் பொயில் - கல்லாடி - மேப்பாடி) நுழைவாயில் அருகே, இன்று பெய்த கனமழையால் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. கல்லாடியில் உள்ள மீனாட்சி பாலத்திற்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
நிலச்சரிவு ஏற்பட்ட உடனே அப்பகுதியில் இருந்து ஒருவர் சடலமாகவும், 7 பேர் உயிருடனும் மீட்கப்பட்டனர். தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. சுரங்கப்பாதை திட்டப் பணியாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்புகளுக்கு அருகே மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிலச்சரிவு குறித்துத் தகவல் வெளியிட்ட கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன், "மீட்புப் பணிகளைத் தாமதமின்றி ஒருங்கிணைக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன; வருவாய்த் துறை அமைச்சர் ஏ.பி.அனில் குமார், வேளாண் துறை அமைச்சர் டி.சித்திக் ஆகியோரை உடனடியாக வயநாட்டிற்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளேன்; மாவட்ட ஆட்சியருடனும் தொலைபேசியில் பேசினேன்" எனக் குறிப்பிட்டார்.
மனிதத் தவறால் ஏற்பட்ட விபத்து
சம்பவம் குறித்துப் பேசிய அமைச்சர் டி. சித்திக், "இது இயற்கையாக நிகழ்ந்த நிலச்சரிவு அல்ல; மனிதத் தவறால் ஏற்பட்ட நிலச்சரிவு. இது நிர்வாக அலட்சியத்தால் நிகழ்ந்த ஒரு தெளிவான சம்பவம். அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் கொங்கன் ரயில்வேக்கு எழுத்துபூர்வமாகத் தெரிவித்திருந்தார்.
தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொங்கன் ரயில்வேக்கு முன்னரே அறிவுறுத்தப்பட்டிருந்தது, ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முண்டக்கையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 298 பேர் உயிரிழந்தனர்; எனவே இதுபோன்ற விஷயங்களைச் சகித்துக்கொள்ள முடியாது" எனக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார்.
தற்போது வயநாடு மற்றும் கோழிக்கோட்டைச் சேர்ந்த மொத்தம் 60 பேர் கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தில் நேரில் தங்கி மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாழும் கலை அமைப்புக்கு விதித்த ரூ. 5 கோடி அபராதம் ரத்து: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 22, ஆகஸ்ட் 2026 5:43:01 PM (IST)

ஏடிஎம்களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூல்? - எஸ்பிஐ நிர்வாகம் விளக்கம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:00:19 PM (IST)

காவல் நிலையத்தில் ராகுல், பிரியங்கா தர்ணா: டெல்லியில் பெரும் பரபரப்பு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 4:36:39 PM (IST)

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட தமிழக அரசே இடத்தை தீர்மானிக்கட்டும்! - கேரள முதல்வர்
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 5:56:07 PM (IST)

கிணற்றில் கார் பாய்ந்து தம்பதி, 2 குழந்தைகள் உயிரிழப்பு: தெலுங்கானாவில் சோகம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:22:33 PM (IST)

கேஒய்சி புதுப்பித்தல் பெயரில் அதிகரிக்கும் சைபர் மோசடி: வாடிக்கையாளர்களுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:58:31 PM (IST)


