» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தனியார் பங்களிப்புடன் விண்வெளி ஆய்வு: சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய விக்ரம்-1!

சனி 18, ஜூலை 2026 4:06:16 PM (IST)

vikram1launch.jpg

ஹைதராபாத்தைச் சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம் வடிவமைத்துள்ள 'விக்ரம்-1' ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. 

இந்திய மண்ணிலிருந்து தனியார் நிறுவனம் ஒன்று விண்கலங்களைச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முதல் ஏவுதல் திட்டம் இதுவாகும்.

முழுவதும் கார்பன் கலப்புக் கட்டமைப்பைக் கொண்டு 7 மாடிகள் கொண்ட பல நிலைகளாக இந்த ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. 'ஆகமன்' எனப் பெயரிடப்பட்ட இத்திட்டத்தின் கீழ், சனிக்கிழமை நண்பகல் 11:30 மணிக்கு ராக்கெட் ஏவப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கவுன்டவுண் முடியும் தருவாயில் (4 நிமிடங்கள் 59 வினாடிகள் இருந்தபோது) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவுதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் பொறியாளர்களால் கோளாறு சரிசெய்யப்பட்டு, நண்பகல் 12:06 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

புவி ஈர்ப்பு விசையைக் கடந்து பயணித்த இந்த ராக்கெட், பூமிக்கு மேலே சுமார் 450 கி.மீ உயரமுள்ள சுற்றுப்பாதையில் ஆய்வு கருவிகளை (பேலோடுகளை) நிலைநிறுத்தியது. இந்த விக்ரம்-1 ராக்கெட், 350 கிலோ எடை வரையிலான செயற்கைக்கோள்களை விண்வெளிக்குச் சுமந்து செல்லும் திறன் கொண்டது என விண்வெளி ஆய்வு மையத் தரவுகள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory