» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தேர்வுச் சீர்திருத்தங்களுக்காக நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் அறிவிப்பு!

ஞாயிறு 26, ஜூலை 2026 8:55:03 PM (IST)

இந்தியாவில் போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிசெய்யும் வகையில், இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட காணொளிச் செய்தியில் தெரிவித்ததாவது: "மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், கடுமையான சட்ட விதிகளைக் கொண்ட புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொண்டு வரப்படுகின்றன.

எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நமது தேர்வு முறை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும், தொழில் நுட்பத்தைச் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். இக்குறைகளைக் களைந்து தேர்வுச் சீர்திருத்தங்களில் கவனம் செலுத்த, தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இனிவரும் தேர்வுகளின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும்."

நந்தன் நிலேகனி தலைமையிலான இந்த உயர்மட்டக் குழு: வினாத்தாள் தயாரிப்பு முதல் தேர்வு முடிவுகள் வெளியீடு வரை முழுமையான ஆய்வு செய்யும். வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான நவீன தொழில்நுட்பப் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கும். தேர்வுகளின் போது தொழில்நுட்பப் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பாக அரசுக்குப் பரிந்துரைகளை வழங்கும்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இச்சூழலில், போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று, தேர்வு முறையை முற்றிலும் மாற்றியமைக்கும் நோக்கில் இந்த உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory