» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் இந்திய மாணவன் சுட்டுக்கொலை : மர்ம நபர்கள் வெறிச்செயல்!
வெள்ளி 24, நவம்பர் 2023 5:10:07 PM (IST)
அமெரிக்காவில் இந்திய மாணவன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் ஒரு மருத்துவ கல்லூரியில் 4ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். ஆதித்யா என்ற இவர் சென்ற கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் காருக்குள்ளேயே கிடந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த சில நாட்கள் பின்னரே இந்த கொலை வெளியே தெரிய வந்துள்ளது.