» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் வணிக வளாகத்தில் தீவிபத்து: 11 பேர் உயிரிழப்பு!

ஞாயிறு 26, நவம்பர் 2023 10:46:10 AM (IST)



பாகிஸ்தானில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் கராச்சியில் தனியார் வணிக வளாகம் செயல்படுகிறது. இந்த வணிக வளாகத்தின் இரண்டாவது மாடியில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். மளமளவென எரிந்த தீ வணிக வளாகத்தின் மற்ற மாடிகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலம் போல காட்சியளித்தது.

இதற்கிடையே தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மற்றொருபுறம் வணிக வளாகத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்றது. இதன்மூலம் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

எனினும் இந்த தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 6 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தீ விபத்தில் சிக்கி மேலும் பலர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் வணிக வளாகத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory