» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஊழல் வழக்கிலிருந்து நவாஸ் ஷெரீஃப் விடுவிப்பு: இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 30, நவம்பர் 2023 10:52:08 AM (IST)
பாகிஸ்தானில் விரைவில் பொதுத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபை ஊழல் வழக்கிலிருந்து விடுவித்து இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிகிச்சைக்காக கடந்த 2019 அக்டோபரில் லண்டனுக்குச் சென்ற நவாஸ் ஷெரீஃப் அங்கேயே தங்கிவிட்டாா். அவரை தப்பியோடிய குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. அப்போது நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான் கான், நாடாளுமன்றத்தால் கடந்த 2022-ஆம் ஆண்டு பதவியிலிருந்து அகற்றப்பட்டதைத் தொடா்ந்து, நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் தலைமையில் ஆட்சி மீண்டும் அமைந்தது. தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இடைக்கால ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், நவாஸ் ஷெரீஃப் கடந்த மாதம் நாடு திரும்பினாா்.
பாகிஸ்தானில் விரைவில் பொதுத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில் நவாஸ் ஷெரீஃபை அவென்ஃபீல்ட் ஊழல் வழக்கிலிருந்து விடுவித்து இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து நீதிபதிகள் அமீா் ஃபரூக், மியான்குல் ஹஸன் ஔரங்கசீப் ஆகியோா் அடங்கிய அமா்வு வெளியிட்டுள்ள தீா்ப்பில், அவென்ஃபீல்டு வழக்கில் இம்ரானுக்கு எதிரான முறையீட்டை தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு திரும்பப் பெற்ால் அந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்கும் கீழமை நீதிமன்றத்தில் தீா்ப்பை உறுதி செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் பதற்றம்: பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
வியாழன் 8, மே 2025 5:37:08 PM (IST)

இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தினர் 10 பேர் பலி!
புதன் 7, மே 2025 4:49:10 PM (IST)

இந்திய ராணுவ நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது: பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு!
புதன் 7, மே 2025 12:42:18 PM (IST)

ஏமன் துறைமுகம் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்: விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி!
புதன் 7, மே 2025 8:50:21 AM (IST)

சிங்கப்பூரில் ஆட்சி அமைக்கும் கட்சியில் 6 தமிழர்கள்: கடையநல்லூர் ஹமீத் ரசாக் எம்பியாக தேர்வு!
செவ்வாய் 6, மே 2025 3:42:12 PM (IST)

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரதமர் மோடியிடம் உறுதி அளித்த புதின்
திங்கள் 5, மே 2025 5:06:52 PM (IST)
