» செய்திகள் - விளையாட்டு » உலகம்

2 நாள் பயணமாக பூடான் சென்றார் பிரதமர் மோடி

வெள்ளி 22, மார்ச் 2024 10:35:52 AM (IST)



பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக இன்று காலை பூடான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

இந்தப் பயணத்தின்போது, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் மற்றும் பூடானின் நான்காவது மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கேவுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் இந்தியா- பூடான் நல்லுறவை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். 

பிரதமர் மோடியின் வருகையையொட்டி, பூடான் முழுவதும் சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இருதரப்பு மற்றும் பிராந்திய விஷயங்களில் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும், மக்களின் நலனுக்காக நமது முன்மாதிரியான கூட்டாண்மையை விரிவுபடுத்தி தீவிரப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கவும் இந்தப் பயணம் ஒரு வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory