» செய்திகள் - விளையாட்டு » உலகம்

புயல் காற்றில் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை: பிரேசிலில் பரபரப்பு!

புதன் 17, டிசம்பர் 2025 11:58:56 AM (IST)



பிரேசில் நாட்டில் உள்ள சுதந்திர தேவியின் சிலை, புயல் காற்றில் சரிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு பிரேசில், குவாய்பா நகரில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு 11 மீட்டர் அடித்தளத்தில் 24 மீட்டர் உயர சுதந்திர தேவி சிலை அமைக்கப்பட்டது. மொத்தம் 114 அடி உயரமாகும். இந்த நிலையில், தெற்கு பிரேசிலில் கடந்த வாரம் உருவான புயல் காரணமாக பல நகரங்கள் வெள்ளக்காடானது. 

இந்த புயலானது கடந்த திங்கள்கிழமை குவாய்பா பகுதியைக் கடக்கும் போது, பலத்த காற்று வீசியுள்ளது. இதன்காரணமாக, 24 மீட்டர் உயர சுதந்திர தேவியில் சிலை சரிந்து தரையில் விழுந்து, துண்டுதுண்டாக உடைந்தது. இந்த சிலை அசையத் தொடங்கியவுடன் வணிக வளாகத்தின் நிர்வாகத்தினர் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, அப்பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

மேலும், அனைத்து தொழில்நுட்ப தர நிலைகளையும் பின்பற்றிதான் இந்த சிலை அமைக்கப்பட்டதாக வணிக வளாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ள நிலையில், பிரேசில் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory