» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தமிழகம் - மலேசியா உறவு பலப்படும்: விஜய்க்கு மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் வாழ்த்து

செவ்வாய் 12, மே 2026 11:57:47 AM (IST)



தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மலேசியப் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எனது நண்பர் விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துகள். மலேசியாவும் தமிழ்நாடும் பல தலைமுறைகளாக மிகவும் ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சாரப் பிணைப்புகளைப் பகிர்ந்து வருகின்றன.

திரையில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களை விட, மிக உயர்ந்த மற்றும் பொறுப்பான பதவியைத் தமிழ்நாட்டு மக்கள் தற்போது விஜயிடம் ஒப்படைத்துள்ளனர். மக்கள் அவர் மீது வைத்துள்ள இந்த நம்பிக்கையை அவர் சிறப்பாக நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.

தமிழகத்துடனான மலேசியாவின் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், வரும் ஆண்டுகளில் முதலமைச்சர் விஜயுடன் இணைந்து பல்வேறு துறைகளில் பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்."

இவ்வாறு மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். உலகத் தலைவர்களிடமிருந்து தமிழக முதலமைச்சருக்குத் தொடர்ந்து வாழ்த்துகள் குவிந்து வருவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory