» செய்திகள் - விளையாட்டு » உலகம்
டித்வா’ புயல் பாதிப்பு: இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய தூதரகம் நிவாரணம்
திங்கள் 22, டிசம்பர் 2025 10:20:10 AM (IST)

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய தூதரகம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதுதொடா்பாக இலங்கைத் தலைநகா் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஆபரேஷன் சாகா் பந்துவின் கீழ் இந்தியா தொடா்ந்து உதவி புரிந்து வருகிறது.
இதன் தொடா்ச்சியாக கொழும்பின் கொல்லானவ பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், இஸ்கான் கோயில் வளாகத்தில் உள்ள குழந்தைகள் இல்லம், கம்பஹா மாவட்டத்தில் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காகவே ஒதுக்கப்பட்ட நயனலோககம கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் இலங்கைக்கான இந்திய தூதா் சந்தோஷ் ஜா நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
கண்டி, நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை கண்டியில் உள்ள இந்திய உதவி தூதரகம் வழங்கியது. மன்னாா், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் நிவாரணப் பொருள்களை அளித்தது என்று தெரிவிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி
வியாழன் 26, மார்ச் 2026 10:29:35 AM (IST)

பாகிஸ்தானில் லஷ்கர் பயங்கரவாதி படுகொலை: சொந்தக் குடும்பத்தினரே தீர்த்துக்கட்டினர்?
திங்கள் 23, மார்ச் 2026 12:55:43 PM (IST)

வளைகுடாப் போரில் அதிரடி திருப்பம்: 4,000 கி.மீ. தூரம் பாயும் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:47:13 AM (IST)

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா பரிசீலனை: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 4:23:35 PM (IST)

போர்க்காலச் சூழல் மத்தியில் ரமலான் பெருநாள்: அமைதி வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை!
சனி 21, மார்ச் 2026 11:58:42 AM (IST)

அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்க இலங்கை அனுமதி மறுப்பு: அதிபர் திஸாநாயக்க தகவல்
வெள்ளி 20, மார்ச் 2026 4:07:14 PM (IST)

