» செய்திகள் - விளையாட்டு » உலகம்
லெபனானின் 2 எண்ணெய் கப்பல்களை சிறைபிடித்த அமெரிக்கா!
வியாழன் 8, ஜனவரி 2026 12:04:28 PM (IST)

தடைகளை மீறியதற்காக லெபனானின் 2 எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் சிறைப்பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
வெனிசுலாவுக்கு சொந்தமான டேங்கர் எண்ணெய் கப்பல் ஒன்று, லெபனானின் போராளி குழுவான ஹிஸ்புல்லாவுடன தொடர்புடைய நிறுவனத்துக்கு சரக்குகளை கொண்டு சென்றதாக கூறி ஒரு கப்பலுக்கு அமெரிக்க கடந்த 2024-ம் ஆண்டு தடை விதித்தது.
இதுபோல மேலும் ஒரு கப்பலுக்கும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த கப்பல்களை அமெரிக்கா கண்காணித்து தேடி வந்தது. இந்த நிலையில் லெபனானின் 2 கப்பல்களை சிறைபிடித்து பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘அமெரிக்காவின் தடைகளை மீறியதற்காக பெல்லா 1 என்ற வர்த்தகக் கப்பலையும், கரீபியன் கடலில் சோபியா என்ற எண்ணெய் கப்பலையும் அமெரிக்கப் படைகள் சிறைப்பிடித்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
புதன் 22, ஏப்ரல் 2026 10:54:33 AM (IST)

ஜப்பானில் 70 ஆண்டுகால ஆயுத ஏற்றுமதி தடை நீக்கம்: ஆஸ்திரேலியாவுடன் ₹60,000 கோடி ஒப்பந்தம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:28:15 AM (IST)

இந்தியா - இலங்கை இடையே 6 ஒப்பந்தங்கள்: துணை ஜனாதிபதி முன்னிலையில் கையெழுத்து!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 9:08:06 AM (IST)

லெபனானில் இயேசு சிலையைச் சேதப்படுத்திய இஸ்ரேல் வீரர்: அமைச்சர் கடும் கண்டனம்!
திங்கள் 20, ஏப்ரல் 2026 3:55:13 PM (IST)

ஈரானிய கச்சா எண்ணெய்: டாலருக்குப் பதிலாக சீன யுவானில் பணம் செலுத்திய இந்தியா!
சனி 18, ஏப்ரல் 2026 5:36:01 PM (IST)

ஈரான் உடனான மோதலில் மிக விரைவான வெற்றி: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:57:28 PM (IST)

