» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கனடா பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 9 பேர் உயிரிழப்பு; தாக்குதல் நடத்தியர் தற்கொலை!

புதன் 11, பிப்ரவரி 2026 12:25:22 PM (IST)



கனடாவில் பள்ளி வளாகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 9 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கனடாவின் டம்பிளர் ரிட்ஜ் பகுதியில் இயங்கி வரும் பள்ளி வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக நேற்று மாலை காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அதிரடிப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பாதுகாப்பு கருதி, பள்ளியைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனத் தற்காப்பு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன. ஒட்டுமொத்தப் பள்ளி வளாகத்தையும் சுற்றி வளைத்த காவல்துறையினர், தாக்குதலாளியைப் பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு தாக்குதலில், பள்ளி வளாகத்திற்குள் 6 பேரும், அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் 3 பேரும் என மொத்தம் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காவல்துறையினர் தாக்குதலாளியை நெருங்குவதற்குள், அவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கொடூரச் சம்பவம் கனடா நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கான காரணம் என்ன? இதில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா? என்பது குறித்து அந்நாட்டுப் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory