» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் பால் வியாபாரி வெட்டிக் கொலை : மர்ம நபர்கள் வெறிச்செயல்!

சனி 2, டிசம்பர் 2023 12:09:11 PM (IST)

திருநெல்வேலியில் பால் வியாபாரி மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரப்பை ஏற்படுத்தியது...

திருநெல்வேலி நகரம் காவல்பிறை தெருவைச் சோ்ந்தவா் பழனி. இவரது மகன் கண்ணன் (33). பால் வியாபாரியான இவா், கடந்த சில மாதங்களாக திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் கோசாலையில் தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வந்தாா். நேற்று இரவு வீட்டில் வேலைகளை முடித்து விட்டு அருகில் உள்ள மாடத் தெருவில் நடந்து சென்றாராம்.

அப்போது, பின்னால் வந்த மா்மநபா்கள் கண்ணனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். சம்பவ இடத்திற்கு வந்த இறந்தவரின் உறவினா்கள் உடலை எடுக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். 

அவா்களுடன் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) சரவணக்குமாா், உதவி ஆணையா் ஆவுடையப்பன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யப்படுவா் என தெரிவித்தனா். 

அதன் பின் இறந்தவரின் உடலை போலீஸாா் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory