» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் வக்கீல் உள்பட 3 பேர் சிக்கினர்
வெள்ளி 8, டிசம்பர் 2023 8:11:21 AM (IST)
நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் வக்கீல் உள்பட 3 பேர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள மணப்படைவீடு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் மகன் சுருளிராஜன் (வயது 52). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் நேற்று முன்தினம் கே.டி.சி. நகரில் இருந்து பாளையங்கோட்டைக்கு காரில் சென்றார்.
அப்போது அவர் பின்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்ற 5 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளால் காரின் பின் பகுதியில் மோதியது. காரில் இருந்து இறங்கிய சுருளிராஜனை அந்த கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.
போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் சுருளிராஜனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக சுருளிராஜன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வக்கீல் ஒருவரும், கோவையில் பதுங்கி இருந்த 2 பேரும் போலீசில் சிக்கியுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)
