» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் வக்கீல் உள்பட 3 பேர் சிக்கினர்

வெள்ளி 8, டிசம்பர் 2023 8:11:21 AM (IST)

நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் வக்கீல் உள்பட 3 பேர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள மணப்படைவீடு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் மகன் சுருளிராஜன் (வயது 52). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் நேற்று முன்தினம் கே.டி.சி. நகரில் இருந்து பாளையங்கோட்டைக்கு காரில் சென்றார்.

அப்போது அவர் பின்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்ற 5 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளால் காரின் பின் பகுதியில் மோதியது. காரில் இருந்து இறங்கிய சுருளிராஜனை அந்த கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வந்தனர்.

போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் சுருளிராஜனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக சுருளிராஜன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வக்கீல் ஒருவரும், கோவையில் பதுங்கி இருந்த 2 பேரும் போலீசில் சிக்கியுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory