» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அதிகனமழை எச்சரிக்கை: பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

சனி 16, டிசம்பர் 2023 3:41:27 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் கவனமாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மாலை முதல் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பொழிவு இருக்கும் என்றும், ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் அதிக கன மழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாஞ்சோலை, காரையாறு உள்ளிட்ட மலை கிராமங்களிலும், கடற்கரை பகுதிகளிலும், இவற்றை ஒட்டியுள்ள ஊர்களிலும், பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் அதிகனமழை வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் இந்த நேரங்களில் உரிய முன்னெச்சரிக்கையுடன் கவனமாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. நீர் நிலைகளில் இறங்க வேண்டாம்; மரங்கள் மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம்; கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திட வேண்டும் சாலைகள், பாலங்களின் மீது வெள்ளம் சென்றால் எக்காரணம் கொண்டும் அதன் மீது செல்லக்கூடாது. மேலும் அதிகனமழை பொழிவு உள்ள நேரங்களில் பாதுகாப்பு காரணங்களால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மழை பாதிப்பு தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை 1077 என்ற எண்ணில் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்திற்கோ, 1070 என்ற எண்ணில் என்ற மாநில கட்டுப்பாட்டு மையத்திற்கோ தெரிவிக்கலாம். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பான உதவிக்கு 101 மற்றும் 112; மழைக்கால நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு 104; அவசர மருத்துவ உதவிக்கு 108; மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு 'மின்னகம்' உதவி மையத்த்தை 94987 94987 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory