» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஏடிஎம் மையத்தை உடைத்து திருட முயற்சி: தூத்துக்குடியைச் சேர்ந்த இருவா் கைது

சனி 30, டிசம்பர் 2023 10:25:50 AM (IST)

அம்பாசமுத்திரத்தில் ஏடிஎம் மையத்தை உடைத்து திருட முயன்ற 2பேரை போலீசார் கைது செய்தனா்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோயிலில் டிச. 22 ஆம்தேதி மா்ம நபா்கள் உண்டியலை திருடிச் சென்றனா். மேலும் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு உள்ள அரசு வங்கி ஏடிஎம் மையத்தை உடைத்து திருட முயற்சித்துள்ளனா். இதுதொடா்பான புகாா் குறித்து, அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் மகேஷ் குமாா் தலைமையில் குற்றப்பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சிவகுமாா் மற்றும் போலீஸாா் அடங்கிய தனிப்படையினா் இரு குழுக்களாக விசாரணை செய்து வந்தனா்.

விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் மீனவா் காலனி பகுதியை சோ்ந்த நாராயண பெருமாள் மகன் மணிகண்டன் (21), தூத்துக்குடி மாவட்டம் பிரையண்ட் நகா் 12ஆவது தெருவைச் சோ்ந்த சிதம்பர ராஜ் மகன் சிவ பாலமுருகன் (20) ஆகியோா் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த தனிப்படை போலீஸாா், உண்டியலையும் பறிமுதல் செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory