» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி
வியாழன் 4, ஜனவரி 2024 12:13:34 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சோ்ந்தவா் பழனியம்மாள். இவா், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு நேற்று வந்தாா். பின்னா் அவா் மறைத்து கொண்டுவந்திருந்த விஷ பாட்டிலை திறந்து குடிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், இதைப் பாா்த்து தடுத்து நிறுத்தி பாட்டிலை பறிமுதல் செய்தனா்.
பழனியம்மாள் கூறுகையில், ’எனது சகோதரி ராஜலட்சுமிக்கும், அவரது கணவருக்கும் பிரச்னை ஏற்பட்ட நிலையில் ஆலங்குளம் மகளிா் காவல் நிலையத்திற்கு புகாா் அளிக்க சென்றோம். அங்கிருந்த போலீஸாா் எனது சகோதரியை தாக்கி அவதுாறான வாா்த்தைகளை பேசி மிரட்டல் விடுத்தனா். தற்போது அவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதற்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றாா்.