» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மீனவருக்கு அரிவாள் வெட்டு; அண்ணன்-தம்பி கைது
ஞாயிறு 7, ஜனவரி 2024 11:56:02 AM (IST)
கூடங்குளம் அருகே மீனவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
கூடங்குளம் அருகே உள்ள பெருமணல் சுனாமி காலனி பகுதியைச் சேர்ந்தவர் இக்னேஷியஸ் (45). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சார்லின் (54), மீனவர். சம்பவத்தன்று இக்னேஷியஸ் தனது மோட்டார் சைக்கிளை அதிக ஒலி எழுப்பும் வகையில் ஸ்டார்ட் செய்ததாக கூறப்படுகிறது. இதை சார்லின் தட்டிக்கேட்டார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இக்னேஷியசின் தம்பி நிர்மல் (42) என்பவர் வீட்டில் உள்ள அரிவாளை எடுத்து வந்து சார்லினை வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சியாம்சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் வினுகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இக்னேஷியஸ், நிர்மல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.