» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மீனவருக்கு அரிவாள் வெட்டு; அண்ணன்-தம்பி கைது

ஞாயிறு 7, ஜனவரி 2024 11:56:02 AM (IST)

கூடங்குளம் அருகே மீனவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.

கூடங்குளம் அருகே உள்ள பெருமணல் சுனாமி காலனி பகுதியைச் சேர்ந்தவர் இக்னேஷியஸ் (45). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சார்லின் (54), மீனவர். சம்பவத்தன்று இக்னேஷியஸ் தனது மோட்டார் சைக்கிளை அதிக ஒலி எழுப்பும் வகையில் ஸ்டார்ட் செய்ததாக கூறப்படுகிறது. இதை சார்லின் தட்டிக்கேட்டார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இக்னேஷியசின் தம்பி நிர்மல் (42) என்பவர் வீட்டில் உள்ள அரிவாளை எடுத்து வந்து சார்லினை வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சியாம்சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் வினுகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இக்னேஷியஸ், நிர்மல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory