» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை நீடிப்பு : அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

செவ்வாய் 9, ஜனவரி 2024 3:28:45 PM (IST)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்டவற்றுக்கு நீர் வரத்து அதிக அளவில் இருந்து வருகிறது. 3 அணைகளும் நிரம்பும் தருவாயில் இருப்பதாலும், தொடர் மழையினாலும் தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. இரவில் மழை பெய்யும்போது அதிக அளவு நீர் திறக்கப்படுவதும், பகலில் நீர் திறப்பு குறைவதுமாக உள்ளது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு 1509 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1666 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணைக்கு வரும் 1,458 கனஅடி நீரும் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதுதவிர தென்காசி மாவட்டத்தில் இருந்து பிரியும் கடனா அணையில் இருந்து 200 கன அடி நீர் ஆற்றில் வருகிறது. இவ்வாறாக இன்று காலை நிலவரப்படி சுமார் 4 ஆயிரம் கனஅடி வரை நீரானது ஆற்றில் செல்கிறது.

மலை பகுதியில் தொடர்மழையால் சொரிமுத்து அய்யனார் கோவில், மணிமுத்தாறு அருவி பகுதிகளுக்கு செல்வதற்கு தடை நீடிக்கிறது. மாஞ்சோலை வனப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மாஞ்சோலையில் 35 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 30 மில்லிமீட்டரும் மழை பெய்தது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 31 மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 37 மில்லிமீட்டரும் மழை பெய்து.

மாவட்டத்தில் சேரன் மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அங்கு அதிக பட்சமாக 20 மில்லி மீட்டர் மழை பெய்தது. அம்பையில் 5 மில்லி மீட்டரும், ராதாபுரத்தில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மேலும் மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இன்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.

தென்காசி மாவட்டத்தில் கடனா நதி அணைப்பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. ராமநதியில் 6 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 4.5 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அடவிநயினார் அணை பகுதியில் 9 மில்லி மீட்டர் மழை கொட்டியது. அணைகள் முழுவதும் நிரம்பிவிட்ட நிலையில் தொடர் மழையால் விவசாயிகள் ஒருவித அச்சத்தில் உள்ளனர்.

தென்காசி, செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இன்று காலை நிலவரப்படி தென்காசியில் 19 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஆய்குடியில் 7 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சங்கரன்கோவிலில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் அதிக அளவில் கொட்டும் தண்ணீரில் அய்யப்ப பக்தர்கள் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் 

பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 141.95 அடி
நீர் வரத்து : 1509.028 கன அடி 
வெளியேற்றம் : 1666.687 கன அடி

சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி 
நீர் இருப்பு : 150.36 அடி 
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :
 உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 115.01 அடி 
நீர் வரத்து : 1458 கனஅடி 
வெளியேற்றம் : 1458 கன அடி
 
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50 அடி
நீர் இருப்பு: 49.20 அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL

நம்பியாறு: 
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 22.96 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி 
நீர் இருப்பு: 34.25 அடி
நீர்வரத்து: 5 கன அடி
வெளியேற்றம்: 3,0 கன அடி
மழை அளவு :
பாபநாசம் : 11 மி.மீ
சேர்வலாறு : 10 மி.மீ
மணிமுத்தாறு : 7.…

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் 

கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 85 அடி
நீர் வரத்து : 200 கன அடி 
வெளியேற்றம் : 200 கன அடி

ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி 
நீர் இருப்பு : 84 அடி
நீர்வரத்து : 116 கன அடி
வெளியேற்றம் : 116 கன அடி

கருப்பா நதி : 
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 68.24 அடி 
நீர் வரத்து : 83 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி 
நீர் வரத்து: 31 கன அடி
வெளியேற்றம்: 31 கன அடி 

அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132 அடி
நீர் இருப்பு: 121 அடி
நீர் வரத்து : 14 கன அடி
நீர் வெளியேற்றம்: 10 கன அடி

மழை அளவு:

கடனா : 12 மி.மீ
ராமா நதி : 6 மி.மீ
கருப்பா நதி : 4.5 மி.மீ
குண்டாறு : 6.2 மி.மீ
அடவிநயினார்: 9 மி.மீ
ஆய்குடி : 7 மி.மீ
செங்கோட்டை: 2.2 மி.மீ
தென்காசி : 19 மி.மீ
சங்கரன்கோவில்: 12 மி.மீ
சிவகிரி : 20 மி.மீ


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory