» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை அருகே துப்பாக்கியுடன் ரவுடி கைது
சனி 27, ஜனவரி 2024 8:30:41 AM (IST)
நெல்லை அருகே துப்பாக்கியுடன் ரவுடி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லையை அடுத்த வடக்கு தாழையூத்து அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மகன் ஜேக்கப் (32). இவர் மீது 6 கொலை வழக்குகள், 3 கொலைமுயற்சி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரது பெயர், போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளது.
இந்த நிலையில் ஜேக்கப் குறித்து பெண் ஒருவர் சமீபத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், ‘‘ஜேக்கப் மாற்று சாதியைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்வதற்காக கையில் துப்பாக்கியுடன் சுற்றி வருகிறார்’’ என்று தெரிவித்து இருந்தார்.
நேற்று முன்தினம் தாழையூத்து பஜார் பகுதியில் சுற்றி திரிந்த ஜேக்கப்பை தாழையூத்து போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவரிடம் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. எனவே ஜேக்கப்பை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.