» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அருகே துப்பாக்கியுடன் ரவுடி கைது

சனி 27, ஜனவரி 2024 8:30:41 AM (IST)

 நெல்லை அருகே துப்பாக்கியுடன் ரவுடி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லையை அடுத்த வடக்கு தாழையூத்து அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மகன் ஜேக்கப் (32). இவர் மீது 6 கொலை வழக்குகள், 3 கொலைமுயற்சி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரது பெயர், போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளது. 

இந்த நிலையில் ஜேக்கப் குறித்து பெண் ஒருவர் சமீபத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், ‘‘ஜேக்கப் மாற்று சாதியைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்வதற்காக கையில் துப்பாக்கியுடன் சுற்றி வருகிறார்’’ என்று தெரிவித்து இருந்தார். 

நேற்று முன்தினம் தாழையூத்து பஜார் பகுதியில் சுற்றி திரிந்த ஜேக்கப்பை தாழையூத்து போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவரிடம் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. எனவே ஜேக்கப்பை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory