» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ராக்கெட் ராஜா வீட்டில் போலீசார் சோதனை: தெக்ஷணமாற நாடார் சங்கம் கண்டனம்

திங்கள் 29, ஜனவரி 2024 4:43:38 PM (IST)

பனங்காட்டுப்படை கட்சித்தலைவர் ராக்கெட் ராஜா வீட்டில் சோதனை நடத்திய காவல்துறைக்கு திருநெல்வேலி தெக்ஷணமாற நாடார் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் சங்கத்தின் செயலாளர் ராஜகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் வடக்கு தாழையூத்தை சேர்ந்த ஜெயக்குமார் மகன் ஜேக்கப் என்பவர் நாகர்கோவில் பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்ததாக வழக்கு போட்டு கைது செய்ததை தொடர்ந்து அவரை பற்றி சமூக வலைதலைத்தில் பெண் ஒருவர் பேசி பதிவிட்டதை கொண்டு அதற்கு சம்பந்தமே இல்லாமல் ஆணைகுடியை சேர்ந்த பனங்காட்டுப்படை கட்சித்தலைவர் ஆறுமுகப்பாண்டியன் (எ) ராக்கெட் ராஜா வீட்டில் வேண்டுமென்றே திட்டமிட்டு அத்துமீறி நுழைந்து சோதனை செய்து கைதுப்பாக்கியை கைபற்றியதாக கூறி உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி அவருக்கும் அவரது கட்சிக்கும் நாடார் சமுதாய மக்களுக்கும் கெட்ட பெயரை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் உருவாக்கி மிரட்டும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம். 

மேலும் தன் மீதுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க சட்டத்திற்குட்பட்டு ஆவண செய்துகொண்டிருக்கும் ஆறுமுகப் பாண்டியன் (எ) ராக்கெட் ராஜா மீது மீண்டும் மீண்டும் பொய்யான வழக்குகளை போட்டு மிரட்டும் காவல்துறையை திருநெல்வேலி தெக்ஷணமாற நாடார் சங்கம் சார்பில் கண்டிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory