» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூடங்குளம் முதலாவது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

செவ்வாய் 30, ஜனவரி 2024 8:14:32 AM (IST)

பராமரிப்பு பணிக்காக கூடங்குளம் முதலாவது அணுஉலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. இந்த நிலையில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக நேற்று காலை 5.30 மணியளவில் முதலாவது அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இந்த பணிகள் இன்னும் ஓரிரு மாதங்கள் நடைபெறும் என தெரிகிறது. முதலாவது அணு உலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது. எனினும் இரண்டாவது அணுஉலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory