» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கூடங்குளம் முதலாவது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
செவ்வாய் 30, ஜனவரி 2024 8:14:32 AM (IST)
பராமரிப்பு பணிக்காக கூடங்குளம் முதலாவது அணுஉலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. இந்த நிலையில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக நேற்று காலை 5.30 மணியளவில் முதலாவது அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இந்த பணிகள் இன்னும் ஓரிரு மாதங்கள் நடைபெறும் என தெரிகிறது. முதலாவது அணு உலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது. எனினும் இரண்டாவது அணுஉலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது