» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் திடீர் மோதல் : ஒருவர் காயம்

புதன் 31, ஜனவரி 2024 8:21:02 AM (IST)

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் இடையே ஏற்றட்ட திடீர் மோதலில் ஒருவர் காயம் அடைந்தார்.

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை சேர்ந்த ரவிசங்கர் (48) என்பவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 

அவர் அடைக்கப்பட்டு இருந்த அதே சிறையில், மற்றொரு கொலை வழக்கில் கைதான கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியை சேர்ந்த தோபியாஸ் (55) என்பவரும் அடைக்கப்பட்டு இருந்தார். இவர்கள் 2 பேருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு சிறை அறையில் படுத்து தூங்கும் இடம் தொடர்பாக இவர்கள் 2 பேருக்கும் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. 

இதில் ரவிசங்கர் தாக்கியதில், தோபியாசின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதை அறிந்த சிறைக்காவலர்கள் உடனடியாக 2 பேரையும் தடுத்து நிறுத்தினர். தோபியாசை சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சிறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory