» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது
செவ்வாய் 13, பிப்ரவரி 2024 8:12:27 AM (IST)
அம்பை அருகே பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா கல்லிடைக்குறிச்சி பகழி கூத்தர் தெருவை சேர்ந்தவர் காவையா. இவருடைய மகன் நாகராஜன் (27). கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்ததும் அந்த பெண்ணின் கணவர் இதுபற்றி, நாகராஜனின் தந்தையிடம் தெரிவித்தார்.
இதையடுத்து காவையா தனது மகனை அழைத்து கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜன், அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த அந்த பெண்ணின் கணவரிடம் வாக்குவாதம் செய்தார்.தகராறு முற்றியதில் அந்த பெண்ணின் கணவரை நாகராஜன் தாக்கியும், அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும், பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது தொடர்பாகவும் நாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.