» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மனைவியை வெட்டிக்கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை: தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு

வெள்ளி 16, பிப்ரவரி 2024 8:20:43 AM (IST)

மனைவியை வெட்டிக்கொன்ற கணவருக்கு  ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது..

நெல்லை அருகே உள்ள அடைச்சாணியை சேர்ந்தவர் முருகன் (40). கூலித் தொழிலாளியான இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நாராயணன் மகள் கணேசம்மாள் (30) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணேசம்மாள் சமையல் வேலைக்கு சென்று வந்தார். அப்போது சமையல் புரோக்கரான பாளையங்கோட்டையைச் சேர்ந்த முத்து என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.

இதுகுறித்து முருகன் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்தார். இதனால் கணேசம்மாள் அவரை பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 4-11-2017 அன்று முருகன், கணேசம்மாள் மற்றும் முத்து மீது பாப்பாக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசம்மாளை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இதன் பிறகு கணேசம்மாள் ஜாமீனில் வெளியே வந்து பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்தார்.

பின்னர் 11-11-2017 அன்று முருகன், மனைவியின் வீட்டிற்கு சென்று அவருடன் தகராறு செய்துள்ளார். அப்போது கணேசம்மாள் முருகனை ஆள் வைத்து கொலை செய்வதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் மறுநாள் கணேசம்மாள் காவல்   நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

வீட்டின் அருகே தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது முருகன் திடீரென அங்கு வந்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கணேசம்மாளை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.இந்த வழக்கு தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி அனுராதா, குற்றம்சாட்டப்பட்ட முருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2,000 அபராதமும், அதனை கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அதனையும் கட்ட தவறினால் ஒரு மாதம் மெய்க்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் குற்றப்பிரிவு வக்கீல் எஸ்.வேலுச்சாமி ஆஜரானார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory