» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டிராக்டரில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி : சிவகிரி அருகே பரிதாபம்!

வெள்ளி 16, பிப்ரவரி 2024 5:11:39 PM (IST)

சிவகிரி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள விஸ்வநாதப்பேரி மெயின் ரோட்டில் வசித்தவர் ராசு மகன் குருவு (60). லோடுமேன். இவர் தனது வயற்காட்டிற்கு உரம் போடுவதற்காக உர மூட்டைகளை வாங்கியுள்ளார். பின்னர் உர மூட்டைகளை டிராக்டரில் ஏற்றிக் கொண்டு வயலுக்குச் சென்றுள்ளார். 

டிராக்டரை விஸ்வநாதப்பேரி அம்பேத்கர் வடக்கு தெருவைச் சேர்ந்த பிச்சையா மகன் ரமேஷ் (33) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.டிராக்டர் சிவகிரி அருகேயுள்ள தனியார் மெட்ரிக் பள்ளி அருகே சென்ற போது வேகத்தடையில் ஏறி இறங்கியுள்ளது. அப்போது டிராக்டரில் இருந்த குருவு தவறி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது டிராக்டரின் டிரைலர் டயர் ஏறி இறங்கியுள்ளது. 

இதில் படுகாயமடைந்த குருவு சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே குருவு பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் டிரைவர் ரமேஷ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory