» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: டிஐஜி ஆய்வு
வியாழன் 25, ஏப்ரல் 2024 8:37:01 PM (IST)
தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறைத் துணைத் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொடிக்குறிச்சி யுஎஸ் பி கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை அங்கு நான்கு அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறையினருக்கு அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின்போது தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உடனிருந்தார்.