» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: டிஐஜி ஆய்வு

வியாழன் 25, ஏப்ரல் 2024 8:37:01 PM (IST)


தென்காசி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறைத் துணைத் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி நாடாளுமன்ற  தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள்  கொடிக்குறிச்சி யுஎஸ் பி   கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை அங்கு நான்கு அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார்  ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து  காவல்துறையினருக்கு அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின்போது  தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார்  உடனிருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory