» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 557வது மற்றும் 558வது புதிய கிளைகள் திறப்பு விழா
திங்கள் 6, மே 2024 5:54:42 PM (IST)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 557வது மற்றும் 558வது புதிய கிளைகள் விழுப்புரம் வளவனூர் மற்றும் தெலுங்கானா நிசாமாபாத்தில் இன்று திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒரு தலை சிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி, பங்கு சந்தைகளில் தனது பங்கினை பட்டியலிட்டதை அடுத்து தனது தொலைநோக்கு பார்வையாக மீண்டும் இந்தியா முழுவதுமான விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ATM வசதியுடன் வங்கியின் 557வது மற்றும் 558வது கிளைகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் 557வது கிளையை தொழிலதிபர் மற்றும் நிலக்கிழார் சுரேஷ் திறந்து வைத்தார். தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத்தில் 558வது கிளையை நிசாமாபாத் சேம்பர் தலைவர் ஜெகதீஸ்வர் ராவ் திறந்து வைத்தார். விழாவில் வங்கியின் மண்டல மேலாளர், ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த திறப்பு விழாவினை சிறப்பித்தார்கள்.
புதிய கிளைகள் திறப்பு குறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் அவர்கள் விளக்கியதாவது: பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட பிறகு வங்கியானது அதனை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல்பாடுகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று 557வது மற்றும் 558வது கிளைகளை ATM வசதியுடன் இன்று துவக்கியுள்ளது. மேலும் இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் துவங்கிட திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய கிளையின் துவக்க விழாவின் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி (TMB), ஒரு பெயர் பெற்ற பழைமையான தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கிவரும் இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து இலாபம் ஈட்டியும் வருகிறது. இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 558 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களை கொண்டு சுமார் 53 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது.
Ganeshrajanமே 8, 2024 - 05:35:09 AM | Posted IP 172.7*****