» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
திங்கள் 27, மே 2024 8:27:24 AM (IST)
குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தமிழகத்தில் கோடையில் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் கனமழை கொட்டியதால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று தென்காசி, குற்றாலம் பகுதிகளில் மழை பெய்யவில்லை, மிதமான வெயில் அடித்தது. அவ்வப்போது குளிர்ந்த காற்று வீசியது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. வெள்ளப்பெருக்கு இல்லாததால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் அனுமதித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினமான நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்தனர். கேரள மாநிலத்தில் இருந்தும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வந்து அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், பழைய குற்றாலம் அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5.30 வரையில் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மற்ற அருவிகளில் 24 மணி நேரமும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். அருவிக்கரைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் மினிபஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:05:57 PM (IST)

பாளையங்கோட்டையில் பொருநை அருங்காட்சியகம் பணிகள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:44:21 PM (IST)

மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராக போராட்டம் : இந்திய மாணவர் சங்கத்தினர் கைது
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:41:15 AM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் சுகுமார் வழங்கினார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 4:34:12 PM (IST)

பொறியியல் கல்லூரி மாணவர் மர்ம மரணம்: சிபிசிஐடி விசாரணை கோரி உறவினர்கள் போராட்டம்!!
திங்கள் 17, பிப்ரவரி 2025 3:31:23 PM (IST)

மூதாட்டியை கட்டி போட்டு 10 பவுன் தங்க நகை பறித்த மர்ம நபர்கள் : போலீஸ் தீவிர விசாரணை!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:44:32 PM (IST)
