» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் உறுதி
வியாழன் 5, மார்ச் 2026 4:54:29 PM (IST)

திருநெல்வேலி மாநகரக் காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட சேகர் தேஷ்முக், இன்று முறைப்படி தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
நெல்லை மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த மணிவண்ணன் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, புதிய ஆணையராகச் சேகர் தேஷ்முக் நியமிக்கப்பட்டார். இன்று காலை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த அவருக்கு, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். பின்னர் அவர் கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: "திருநெல்வேலி மாநகரில் சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதற்கும், குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்பாக, தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி, மிகவும் அமைதியான முறையிலும் நேர்மையாகவும் நடத்துவதற்குத் தேவையான அனைத்துத் தீவிர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும். மாநகர மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களது முதன்மையான நோக்கம்," என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் விஜய்யின் புகைப்படத்திற்கு அருகே அமர மறுக்கும் மேயர்: நெல்லையில் சர்ச்சை!
செவ்வாய் 9, ஜூன் 2026 8:05:42 AM (IST)

தனிநபர் கடன், கல்விக் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் ஆனந்த் மோகன் தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 5:46:43 PM (IST)

நெல்லையில் அண்ணாமலை இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம்: பொதுமக்கள் ஆர்வம்!
திங்கள் 8, ஜூன் 2026 5:18:27 PM (IST)

கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக் கூடாது? உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
திங்கள் 8, ஜூன் 2026 4:16:17 PM (IST)

நெல்லை - தென்காசி வழித்தட எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 10:56:37 AM (IST)

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை: குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை
திங்கள் 8, ஜூன் 2026 10:37:14 AM (IST)


