» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை: நெல்லை மாநகரக் காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் உறுதி
வியாழன் 5, மார்ச் 2026 4:54:29 PM (IST)

திருநெல்வேலி மாநகரக் காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட சேகர் தேஷ்முக், இன்று முறைப்படி தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
நெல்லை மாநகரக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த மணிவண்ணன் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, புதிய ஆணையராகச் சேகர் தேஷ்முக் நியமிக்கப்பட்டார். இன்று காலை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த அவருக்கு, காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். பின்னர் அவர் கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: "திருநெல்வேலி மாநகரில் சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதற்கும், குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும். குறிப்பாக, தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி, மிகவும் அமைதியான முறையிலும் நேர்மையாகவும் நடத்துவதற்குத் தேவையான அனைத்துத் தீவிர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும். மாநகர மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களது முதன்மையான நோக்கம்," என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் செயற்கை நுண்ணறிவு பயிற்சி: இளைஞர்களுக்கு அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:23:01 PM (IST)

நெல்லை - தாதர் எக்ஸ்பிஸில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: ரயில் நிலைய மாற்றம் அறிவிப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 10:39:30 AM (IST)

நாங்குநேரி இரட்டைக்கொலை: பழிக்குப்பழி வாங்க அரங்கேறிய பயங்கரம் - திடுக்கிடும் தகவல்கள்!
வியாழன் 5, மார்ச் 2026 8:18:47 AM (IST)

கொக்கிரகுளத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான வண்ண மீன் காட்சியகம் திறப்பு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:38:58 PM (IST)

பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணி அடிக்கல் நாட்டு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:19:09 PM (IST)

கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 5:42:34 PM (IST)

