» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விழுப்புரம் மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள்: ஆட்சியர் கார்த்திகேயன் அனுப்பி வைத்தார்!
சனி 7, டிசம்பர் 2024 4:43:19 PM (IST)

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.8.52 இலட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், அனுப்பி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (07.12.2024) /பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், அனுப்பி வைத்தார்கள்.
தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் வட மாவட்டங்களை புரட்டி எடுத்த பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 5 கிலோ அரசி, சீனி, நயம் துவரம் பருப்பு, ரவை ½ கிலோ, மல்லி பொ, மஞ்சல் பொடி, வத்தபொடி, சாம்பார் பொடி, சீரகம், கடுகு, டீ தூள், பிஸ்கட் பாக்கெட், போர்வை, சேலை, சாரம் என 1068 குடும்பங்களுக்கு ரூ.8.52 இலட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன், அனுப்பி வைத்தார்.
நிவாரணம் வழங்க முன்வரும் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள் பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ஆ.சரவணன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உள்ளார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி நலவாழ்வுச் சங்கத்தில் பணியிடங்கள் : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:42:05 PM (IST)

கல்வி வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு : சமய நல்லிணக்க மாநாட்டில் வலியுறுத்தல்!
திங்கள் 12, ஜனவரி 2026 3:23:30 PM (IST)

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!
திங்கள் 12, ஜனவரி 2026 10:26:10 AM (IST)

வீடுகளில் புகுந்து 20 பவுன் நகை-வெள்ளிப்பொருட்கள் கொள்ளை: மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 11, ஜனவரி 2026 10:36:46 AM (IST)

போகி பண்டிகையில் பிளாஸ்டிக், டயர், ட்யூப் எரிக்க கூடாது: ஆட்சியர் சுகுமார் வேண்டுகோள்
சனி 10, ஜனவரி 2026 5:20:20 PM (IST)

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 635 பேருக்கு நியமன ஆணை: சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
சனி 10, ஜனவரி 2026 4:31:25 PM (IST)

