» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!

செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

நெல்லையில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த கொத்தனாரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். பெற்றோர் இல்லாததால் அவர் தனது அண்ணனின் பராமரிப்பில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவரது அண்ணன் வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது அந்த இளம்பெண் அழுதுகொண்டே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து விசாரித்துள்ளார்.

விசாரணையில், அண்ணன் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இது குறித்து அந்தப் பெண்ணின் அண்ணன் உடனடியாக நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி தலைமையில் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பேட்டை திருப்பணிகரிசல்குளத்தைச் சேர்ந்த செல்லத்துரை மகன் இசக்கிதுரை (34) என்பவர் இக்குற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. கொத்தனாராக வேலை பார்த்து வரும் இவர், திட்டமிட்டு இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து இசக்கிதுரையை அதிரடியாகக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory