» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலியில் போதையில்லாத தமிழகத்தை உருவாக்க கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
வெள்ளி 14, மார்ச் 2025 9:26:13 PM (IST)

வல்லநாடு துளசி கல்விக் குழுமம் மற்றும் எம்பவர் இந்தியா சமூக செயல்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் சார்பில் போதையில்லாத தமிழகம் குறித்த விழிப்புணர்வு பேரணி திருநெல்வேலியில் நடைபெற்றது.
இந்த பேரணியை எம்பவர் இந்தியா கௌரவச் செயலாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ஆ.சங்கர் துவக்கி வைத்தார். துளசி கல்விக் குழுமத்தின் நிர்வாக அதிகாரி பேராசிரியர் அறிவழகன் முன்னிலை வகித்தார். பேரணியானது திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியிலிருந்து தொடங்கி சமாதானபுரத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பேராசிரியை வள்ளித்தாய் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)
