» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் சிறுவன் ஓட்டி வந்த பைக் பறிமுதல் : ரூ.25ஆயிரம் அபராதம், பெற்றோர் மீது வழக்குபதிவு

சனி 22, மார்ச் 2025 5:20:13 PM (IST)

தூத்துக்குடியில் சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து ரூ.25ஆயிரம் அபராதம் விதித்தனர். பெற்றோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் மேற்பார்வையில், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் தலைமையில் போக்குவரத்து பிரிவு போலீசார் நேற்றுதென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலசண்முகபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது தூத்துக்குடியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்துள்ளார். 

இதனையடுத்து மேற்படி சிறுவனின் இருசக்கர வாகனத்தை போக்குவரத்து பிரிவு போலீசார் பறிமுதல் செய்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் மோட்டார் வாகன சட்டத்தை மீறி சிறுவனுக்கு இருசக்கர வாகனத்தை ஓட்ட அனுமதித்த சிறுவனின் தந்தை மீது மேற்படி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ரூ.25,000 அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

JeevaMar 24, 2025 - 09:44:13 AM | Posted IP 172.7*****

Super

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory