» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
டாஸ்மார்க் கடைகளில் அதிக விலைக்கு மது விற்பனை : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 24, மார்ச் 2025 3:45:00 PM (IST)
தூத்துக்குடி டாஸ்மார்க் கடைகளில் எம்.ஆர்.பி.யை விட அதிகமாக விலைக்கு மதுபானம் விற்பனை குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி டூவிபுரம் ராஜவேல், காசிலிங்கம் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "பல டாஸ்மார்க் கடையில் எம்ஆர்பி விலையை விட அதிக விலைக்கு காவல்துறை பாதுகாப்புடன், மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றது. இதனை கண்டித்து பாஜக சார்பாக இவ் ஊழல் மீது தமிழக முதல்வர் துணை முதல்வர் படங்கள் ஒட்டியும் வருகின்றனர். அவர்களை காவல்துறை கைது செய்கிறது.
ஆனால் அதிக விலைக்கு விற்கும் டாஸ்மார்க் ஊழியருக்கு சாதகமாக செயல்படுகிறது. டாஸ்மார்கில் அதிக விலைக்கு மது விற்பதை காவல்துறையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது. அரசு அதிகாரிகள் பில்லுக்கு மேல் அதிக விலைக்கு பொருளை விற்பனை செய்யக்கூடாது, விற்பனை விலை, கடையின் உள்ள ஸ்டாக் எழுதியும் வைக்கப்பட வேண்டும் என சட்டம் உள்ளது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்னர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)

MarimuthuMar 24, 2025 - 06:39:31 PM | Posted IP 162.1*****