» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம் : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு
செவ்வாய் 25, மார்ச் 2025 3:05:25 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்களுக்கு வரும் 29 ஆம் தேதி பொது ஏலம் நடைபெறும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் மதுவிலக்கு தொடர்பான குற்ற செயல்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 19 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 20 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 29.03.2025 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி கோரம்பள்ளம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெற உள்ளது.
மேற்படி ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை பொதுமக்கள் 27.03.2025 மற்றும் 28.03.2025 ஆகிய 2 நாட்கள் (காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை) பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 29.03.2025 அன்று காலை 08.00 மணிக்குள் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபர்கள் ரூபாய் 1000/- (ஆயிரம் மட்டும்) முன்பணமாக செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். முன் பணம் செலுத்திய நபர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும். இது தொடர்பான விவரங்களுக்கு தூத்துக்குடி மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண் : 9363229366ல் தொடர்பு கொண்டு தகவல்கள் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்து கொள்ளப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)

சுற்றுலாதலங்களில் மதி அங்காடி நடத்துவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வியாழன் 8, மே 2025 11:21:00 AM (IST)

தமிழ்நாட்டில் வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன் : நயினார் நாகேந்திரன் பேட்டி
புதன் 7, மே 2025 4:37:46 PM (IST)

தமிழறிஞர் கால்டுவெல் 211-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!
புதன் 7, மே 2025 12:11:51 PM (IST)

நெல்லை மாநகர் குளங்களில் அமலைச் செடிகள் அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 6, மே 2025 4:36:31 PM (IST)

SivaSriMar 25, 2025 - 03:20:33 PM | Posted IP 172.7*****